’சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்.பெயர் ’ : ’மோடி’ சர்ஃபிரைஸ்

புதன், 6 மார்ச் 2019 (17:47 IST)
இன்று சென்னை வந்துள்ள நம் நாட்டின் பிரதமர் மோடி பாஜக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறுகின்ற தேர்தல் பரப்புரை அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிவருகிறார்.
தற்போது இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த மோடி யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழர்களின் வாய்க்கு சர்க்கரைப் பொங்கல் செய்தியை அறிவித்திருக்கிறார்.
 
அதில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர்  பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் சென்னை விமான நிலையத்தில் அறிவிக்கப்படும் தகவல் இனி தமிழில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்