முறைகேடாக மெட்ரோ தண்ணீர் வாங்கினால் சிறைதான்… அதிரடி உத்தரவு!

வெள்ளி, 28 மே 2021 (08:28 IST)
மெட்ரோ தண்ணீர் முறைகேடு செய்து வாங்கினால் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சில பகுதிகளில் குடிநீர் லாரிகள் வாயிலாக கொண்டு செல்லப்பட்டு கொடுக்கப்படுகின்றன. அதே போல அடுக்கு மாடி குடியிருப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு மெட்ரோ வாட்டர் குறைந்த விலையில் விற்பனையும் செய்யப்படுகிறது.

இந்நிலையில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை ஆன்லைனில் பதிவு செய்து முறையாக வாங்காமல் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் மூலம் முறைகேடாக வாங்குவதும் நடக்கிறது. அதை தடுக்கும் விதமாக முறைகேடாக தண்ணீர் சப்ளை செய்யும் லாரிகளுக்கு 20000 ரூபாய் வரை அபராதமும், லாரி உரிமையாளர், டிரைவர் மற்றும் தண்ணீர் வாங்கியவர் ஆகியவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்