அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் வைகோ?

செவ்வாய், 31 மே 2016 (09:48 IST)
மதிமுகவின் அடுத்த கட்ட நிலை குறித்து விவாதிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் வைகோ.
 

 
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மதிமுக அனைத்து தொகுதிகலிலும் படுதோல்வி அடைந்தது.
 
இதனையடுத்து, மதிமுகவின் அடுத்த கட்ட நிலை குறித்து விவாதிக்க மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வைகோ கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று மாலை 5  மணிக்கு நடைபெறுகிறது.
 
இந்த கூட்டத்தில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய்ய உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கருத்து சொல்ல உள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்