மணிப்புரில் இருந்து சென்னை வந்த 9 பேர் கொண்ட குடும்பம்.. உதவி செய்த தமிழக அரசு..!

வெள்ளி, 28 ஜூலை 2023 (07:53 IST)
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சென்னை வந்த 9 பேரைச் சேர்ந்த குடும்பத்திற்கு தமிழக அரசு உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பி சென்னை வந்த ஒன்பது பேர் கொண்ட குடும்பம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் குறித்த தகவலை மூர்த்தி என்பவர் மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து உடனடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அந்த குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு மனு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக சென்று அவருக்கு உதவி செய்துள்ளார்.  
 
ஜோசப் என்பவரின் தலைமையிலான அந்த குடும்பத்திற்கு வேலை வாய்ப்பு மற்றும் இருப்பிடம் ஆகியவை வழங்குவதற்கு  சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து உதவிகளும் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா ஆகியவர்களுக்கு ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி கூறியுள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்