4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சாகும் வரை சிறை என தீர்ப்பு!

புதன், 23 பிப்ரவரி 2022 (13:02 IST)
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒருவரை இயற்கையாக அவர் சாகும் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராமநாத மாவட்டம் கீழக்கரையில் 4 வயது சிறுமி ஒருவருக்கு ராஜா முகமது என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
 
இந்த தீர்ப்பில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜாமுகமது என்ற நபருக்கு இயற்கை மரணம் அடையும் வரை வாழ்நாள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூபாய் 1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்