மனைவி குடும்பத்தினர் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட திமுக கட்சி பொறுப்பாளர்!

வியாழன், 7 அக்டோபர் 2021 (10:14 IST)
சென்னையைச் சேர்ந்த சவுண்ட் சர்வீஸ் நடத்திவரும் அந்த நபருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் வித்யாகுமார். இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் நிஷா என்ற பெண்ணோடு திருமணம் நடந்துள்ளது.இதையடுத்து சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக வித்யாகுமாரின் தாயார் நிஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதே போல நிஷாவும் தன் கணவர் மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக விசாரிக்க போலிஸார் வித்யாகுமாரை அழைத்துள்ளனர். அவர் வெளியே இருப்பதாக சொல்லியுள்ளார். இதனால் அவரின் பெற்றோரை ஸ்டேஷனுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வித்யாகுமார் தன்னுடைய குடோனில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலை சம்மந்தமாக செல்போனில் பேசி வீடியோ ஆதாரம் வெளியிட்ட பின்னரே தற்கொலை செய்துகொண்டார். மரணமடைந்த வித்யாகுமார் திமுகவில் வார்டு அளவில் பொறுப்பில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்