காதலிக்கு வேறொருவருடன் நிச்சயம்; கழுத்தறுத்து கொன்ற காதலன்! – மதுரையில் பரபரப்பு!

ஞாயிறு, 10 ஜூலை 2022 (10:19 IST)
காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருந்ததால் ஆத்திரத்தில் பெண்ணை கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை காளவாசல் அருகே பொன்மேனி பகுதியை சேர்ந்த மளிகை கடை நடத்தி வரும் பாண்டி என்பவரின் மகள் அபர்ணா. 12ம் வகுப்பு முடித்த அபர்ணா கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி விராட்டிப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞருடன் அபர்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில் இது அபர்ணாவின் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது.

இதனால் அவர்கள் அபர்ணாவுக்கு வேறு ஒரு பையனை நிச்சயம் செய்துள்ளனர். இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு அபர்ணா வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்த ஹரிஹரன், சம்பவத்தன்று அபர்ணா வீட்டிற்குள் புகுந்து அவரது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அபர்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தப்பி தலைமறைவான ஹரிஹரனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்