நேற்று காலை முதலே உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை சாதாரண நாட்களை விட அதிகமாக இருந்ததாகவும் இதனால் விமான கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சாதாரண நாட்களில் மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.4,542 என்று இருந்த நிலையில் தற்போது அது ரூ.18,127 என உயர்ந்துள்ளது. அதேபோல் துாத்துக்குடி - சென்னை ரூ.17,401 என்றும், திருச்சி - சென்னை ரூ.9,164 என்றும், கோவை - சென்னை - ரூ.6,475 என உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.