மீண்டும் தொடங்கும் மதுரை – துபாய் விமான சேவை! – முன்பதிவை தொடங்கிய ஸ்பைஸ்ஜெட்!

திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:40 IST)
கொரோனா காரணமாக சர்வதேச விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை – துபாய் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக சர்வதேச விமான சேவைகள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்நிலையில் அக்டோபர் 1 முதல் மதுரை – துபாய் இடையே விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தின் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துபாயிலிருந்து மதுரைக்கும், ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் மதுரையிலிருந்து துபாய்க்கும் விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்