தமிழ்நாடு சிறைத்துறையில், 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிறையில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பட்டியலை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு, "மனுதாரர் ஒரே மாவட்டத்திற்கு உட்பட்ட சிறைகளில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். எனவே, நிர்வாக வசதிக்காகவே அவர் பணிமாறுதல் செய்யப்பட்டார்" என்று விளக்கம் அளித்தது.
அரசு தரப்பின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதி, தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிறையில் பணிபுரிந்து வரும் அனைவரும் குறித்த பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த பட்டியல், சிறைத்துறை நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக கோரப்பட்டுள்ளது.