திருமணத்திற்கு முன் பெற்ற குழந்தை ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை: காதலன் - காதலி கைது!

செவ்வாய், 22 நவம்பர் 2022 (08:00 IST)
திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்று அந்த குழந்தையை 2.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த காதலன் மற்றும் காதலி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையை சேர்ந்த இளைஞர் மற்றும் அவருடைய காதலி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அவர்கள் இடைத்தரகர் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்தனர்
 
இதனை அடுத்து 2.5 லட்ச ரூபாய்க்கு காதலன் காதலி ஆகிய இருவரும் இடைத்தரகரின் விற்பனை பெற்றுள்ளனர். இது குறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது காதலன் காதலி மற்றும் இடைத்தரகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை கோபிசெட்டிபாளையத்தில் மீட்கப்பட்டதாகவும் பிறந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் குழந்தையை விற்று உள்ளதாகவும் தெரிகிறது
 
மேலும் குழந்தையை விற்ற 2.5 லட்ச ரூபாயில் காதலிக்கு ஒரு லட்ச ரூபாய் காதலன் கொடுத்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இது குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்