காதலியை கைப்பிடிக்க அல்பமாய் கடிகாரத்தை திருடிய காதலன்!

வியாழன், 27 ஜூன் 2019 (14:06 IST)
காதலியை கரம் பிடிக்க விடிய விடிய போராடி பங்களாவில் புகுந்து ஒரே ஒரு சுவர் கடிகாரத்தை திருடி போலீஸில் சிக்கியுள்ளார் காதலன். 
 
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் செளந்திரபாண்டியன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். 
 
போலீஸார் சிசிடிவியை வைத்து திருட்டில் ஈடுப்பட்ட செல்லதுரை, மைக்கேல் அந்தோணி, விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணை செல்லதுரையின் வாக்குமூலம் சிரிப்பாய் இருந்துள்ளது. 
செல்லதுரை கூறியதாவது, நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். காதலித்த பெண்ணை மணக்க அதிக பணம் வேண்டும் என்று மாமனார் கூறினார். எனவே, எனது நண்பர்களுடன் ஒரு வீட்டில் திருட சென்றேன். 
 
வீட்டின் பூட்டை நீண்ட நேரம் போராடி உடைத்து, வீட்டிற்குள் புகுந்தோம். பீரோவை திறக்க முயன்றோம் ஆனால் பல மணி நேரமாக முயற்சித்தும் பீரோவை திறக்க முடியவில்லை. 
 
எனவே, வீட்டில் இருந்த சுவர் கடிகாரம் ஒன்றையும், எல்.ஈ.டி. டிவியை எடுத்துக்கொண்டு தப்பித்தோம். கடிகாரத்தை 80 ரூபாய்க்கும், டிவியை 1000 ரூபாய்க்கு விற்றதாகவும் தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்