இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “இறைவி”. இது பெண்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம் என்று இயக்குனர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், படம் வெளிவந்தபின் எதிர்மறையான விமர்சனங்களும் வெளிவந்தன.
அவர் கூறும்போது “பெண்களுக்கு மதிப்பளிக்கும் படம் என்று கூறிவிட்டு கடைசி ஐந்து நிமிஷம் மட்டும் அவங்களுக்கு ஆதரவா கருத்து சொன்னால் போதுமா? அதுவும் இந்த மாதிரி படங்களில் விஜய் சேதுபதி நடித்ததை சகித்துக் கொள்ளவே முடியாது. படம் முழுக்க வன்முறை. பல இளம் பெண்கள் விஜய் சேதுபதியின் ரசிகைகளாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவருக்கு ஒரு சமூக பொறுப்பு வேண்டாமா? தான் என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்து நடிக்க வேண்டாமா?” என்றெல்லாம் பொங்கிவிட்டார்.