சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு: துணை குடியரசு தலைவர் வருகை!

வெள்ளி, 13 மே 2022 (17:00 IST)
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வரும் 28ஆம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
 
இந்த சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வரும் 28ஆம் தேதி சென்னை வர இருக்கிறார்
 
இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்