ரூ.1 லட்சம் நிதி வழங்கிய கமல்ஹாசன்: யாருக்கு தெரியுமா?

செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:37 IST)
ரூ.1 லட்சம் நிதி வழங்கிய கமல்ஹாசன்: யாருக்கு தெரியுமா?
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தற்போது நடத்தி வருகிறார். ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்த அவருடைய கட்சியை விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தனது கட்சியின் சார்பில் அவ்வப்போது சமூக கருத்துக்களை ஆவேசமாகவும் அமைதியாகவும் தனது டுவிட்டரில் தெரிவித்து வரும் கமல்ஹாசன் தற்போது ரூபாய் ஒரு லட்சம் காசோலையை நிதியாக வழங்கியுள்ளார்,
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நம் தேசத்தின் எல்லைகளைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் கொடிநாள் நிதியாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ரூ.1,00,000/- காசோலை வழங்கினேன். #வீரரைப்_போற்றுதும்_விவசாயியைப்_போற்றுதும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்