கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் மீண்டும் சிறையிலடைப்பு

வியாழன், 28 ஜூலை 2022 (07:59 IST)
கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அந்த பள்ளியின் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஆசிரியைகள் ஒரு நாள் சிபிசிஐடி விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்பதும் அவர்களை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு பின்னர் மீண்டும் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது
 
மேலும் இன்று மதியம் 12 மணிவரை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் நேற்று இரவு 5 பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது என்பதும் விரைவில் இந்த வழக்கு குறித்த பல உண்மைகளை சிபிசிஐடி கண்டு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்