தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் திராவிட கட்சிகளான அதிமுக, திமுகவிற்கு இது சோதனை காலம் எனலாம். அதிமுகவின் தலைமை பதவியை வகித்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அந்த இடத்தை பிடிப்பதில் போட்டி நிலவுகிறது.
சசிகலாவிற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் இருந்து கொண்டு தீபா, முதல்வர் பன்னீர்செல்வம் என ஆதரவு அளித்து வருகின்றனர். மற்றொரு பிரதான கட்சியான திமுகவின் தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் ரகசியமாக கனிமொழியும், அழகிரியும் சேர்ந்து கலைஞர் திமுக என்ற புதிய கட்சியை தங்கள் ஆதரவாளர்களுடன் தொடங்க வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கான முயற்சிகளில் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் இறங்கியுள்ளதாக பேசப்படுகிறது. இதனால் திமுக தொண்டர்கள் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.