கரூர் மாவட்ட ஆட்சியரை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்ட ஜோதிமணி எம் பி!

வியாழன், 25 நவம்பர் 2021 (16:32 IST)
கரூர் மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக ஜோதிமணி உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அலிம்கோ நிறுவனம் உபகரணங்கள் வழங்க முகாம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்