கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்க வேண்டும்: நீதிபதி வேண்டுகோள்

வெள்ளி, 28 ஜூலை 2023 (17:42 IST)
கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று நீதிபதி வேண்டுகோள் வைத்துள்ளார்.  
 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இது குறித்து கூறிய போது கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க  வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 
அதேபோல் சிறையில் தாயுடன் இருக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்குவதுடன் மழலையர் பள்ளிகளை தொடங்கவும் வேண்டுமென நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் பினைத்தொகையை செலுத்த முடியாமல் ஜாமீன் பெற்று சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்