இதை அடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர்,
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை காரணம் காட்டி யாராவது தற்கொலை செய்துக்கொண்டால், அதிமுக மேலிடத்தில் இருந்து மூன்று லட்சம் பணம் வாங்கி தருவதாக செய்திகள் பரவி வருகிறது.
கடந்த வருடம் ஊழல் குற்றச்சாட்டில் பெங்களூர் சிறையில் ஜெயலலிதா அடைக்கப் பட்டபோது, அதிமுக தொண்டர்கள் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்தனர். இதை அடுத்து, சிறையில் இருந்து மீண்டு வந்ததும், ஜெயலலிதா, இறந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் உதவி தொகை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.