சசிபெருமாளுக்கு மரியாதை செய்த ஜெயலலிதா

கே.என்.வடிவேல்

புதன், 22 ஜூன் 2016 (14:16 IST)
சமூக சேவகர் சசிபெருமாளுக்கு மதுக்கடையை மூடி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செய்துள்ளார்.
 

 
மது கடைகளை மூடியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதரணி சட்டப் பேரவையில் பாராட்டுத் தெரிவித்தார்.
 
ஆனால், அதையும் மீறி யாருக்கும் தெரியாமல் முதல்வர் ஜெயலலிதா ஒரு அதிரடி செய்துள்ளார். அது என்னவென்றால், எந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று சமூக சேவகர் சசிபெருமாள் போராடி உயிர்நீத்தாரோ அந்த மதுக்கடையை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இது, அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையாகும். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி செயல் தமிழகத்தில் உள்ள சமூக அவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்