வேகமெடுக்கும் ஜெயலலிதா: மருத்துவமனையில் இருந்தவாறே பறக்கிறது உத்தரவுகள்!

திங்கள், 26 செப்டம்பர் 2016 (14:23 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைந்தாலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதால் வீடு திரும்ப இன்னும் சில தினங்கள் ஆகும்.


 
 
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தவாறே முதல்வர் ஜெயலலிதா உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் பணிகளுக்கான உத்தரவை கட்சியினருக்கு வழங்கி வருகிறார்.
 
பொதுவாக தேர்தல் பணிகளில் களத்தில் முதலில் குதிக்கும் அதிமுக இந்த முறையும் முதலிலேயே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் ஓய்வில் இருந்தாலும் வேகமாக செயல்பட்டு வருகிறார்.
 
அவரது பெயரில் அறிக்கைகளும் வருகின்றன. அரியலூர் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கலும், நிதி உதவியும் அறிவித்தார். அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு ,தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் கவனம் காட்டும்படியும் உத்தரவிட்டு இருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்