கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் கடந்த மூன்று நாட்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகளில் மற்றும் கோவில்களில் விஷேச யாகங்களும், பிராத்தனைகளும், தொழுகைகளும் நடைபெற்று வருகின்றனர்.
கரூர் நகர அ.தி.மு.க சார்பிலும் மூன்றாவது நாளாக பல்வேறு கோயில்களில் விஷேச யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ தனக்கு சீட்டு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அடிக்கடி கட்சி நிகழ்ச்சிகளில் காட்டுவதோடு, ஒவ்வொரு கூட்டத்தையும் புறக்கணித்தார்.
உண்மையான அ.தி.மு.க வினர்., மேலும் கரூர் மஹா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்திலும், பூஜையிலும் கூட்டம் குறைவாக காணப்பட்டதோடு, பூஜை செய்வதற்கு மூல காரணமான அம்மாவின் புகைப்படம் அனைவரின் பின்னால் வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.