இதை தவிர்த்து மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அதிமுக உறுதியாக உள்ளதாகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்த போது அதனை விலக்கியது திமுக கட்சி. இது இன்றைய தலைமுறைக்கு தெரியாது என கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் அமளியில் ஈடுபட்டனர். மதுவிலக்கு குறித்த முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு கேட்டனர். அப்போது சபாநாயகர் தனபால், பதிலுரையின் போது பேசுவதற்கு அனுமதி அளிக்க முடியாது எனவும், பதிலுரை முடிந்த பின்னர் பேச வாய்ப்பு தரப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, எதிர்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் கச்சத்தீவு, பூரண மதுவிலக்கு என்ற இரண்டு வார்த்தைகளை சொன்னால் போதும் பதில் சொல்ல முடியாமல் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விடுகின்றனர் என்று கூறினார்.