அந்த புயல் தமிழகத்திலிருந்து விலகிச் செல்லும் போது, அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும். இதனால் நாகை, பாம்பன் ஆகிய இரண்டு துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த புயல் தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சு விடும் என்பதால், வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.