பாடகி சுசித்ரா மீது பிரபல அரசியல் கட்சி போலீஸ் புகார்

ஞாயிறு, 5 மார்ச் 2017 (22:35 IST)
கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகமே அதிரும் வகையில் பாடகி சுசித்ரா தனது டுவிட்டரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அவருடைய அடுத்த வீடியோ என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், திரையுலகினர் அது நம்ம வீடியோவாக இருக்க கூடாது என்ற கவலையில் உள்ளனர்




இந்நிலையில் தற்போது இளைஞர்களின் கவனம் நெடுவாசல் நோக்கி இருக்கும் நிலையில் சமூகவலை தளங்களில் தவறான படங்களை வெளியிடுவதன் மூலம் இளைஞர்களின் கவனம் திசைதிரும்ப வாய்ப்புள்ளதாக இந்திய தேசிய லீக் கட்சி, பாடகி சுசித்ரா மீது குற்றம் சுமத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி பாடகி சுசித்ரா மீது சென்னை மாநகர காவல் ஆணையத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் புகார் மனு ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடகி சுசித்ராவின் தரப்பு இதுகுறித்து கூறியபோது, அவர் கடந்த மூன்று வாரங்களாக தன்னுடைய டுவிட்டரை பயன்படுத்தவில்லை என்றும் இது முழுக்க முழுக்க ஹேக்கர்களின் கைவரிசை என்றும் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்