அதில் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல என எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடலில் நச்சுப்பொருள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அது சில மாதங்களுக்குப் பின்னரே தெரிய வரும் என்றும் அவர் கூறியுள்ளார். எப்படி இருப்பினும், அறிக்கை குறித்து காவல்துறையினருடன் ஆலோசித்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவணின் பெறோரும் உறவினர்களும் வலியுறுத்தி உள்ளனர்.