ஒழுங்கீனமும், முறைகேடும் அதிகமானால் சர்வாதிகாரியாகி மாறுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஞாயிறு, 3 ஜூலை 2022 (16:59 IST)
முறைகேடுகள் ஒழுங்கீனங்கள் அதிகமானால் நான் சர்வாதிகாரியா மாறி நடவடிக்கை எடுப்பேன் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கவுன்சிலர் முதல் மேயர் வரை அனைவரும் எந்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாக கூடாது என்றும் ஒழுங்கீனமும், முறைகேடும் அதிகமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
நாமக்கல் பொம்மகுட்டை மேட்டில்  நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடதக்கது. முதல்வரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்