முதல்வர் ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது. ஆளுநர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரை பார்க்க சென்றாலும் அவரை யாரும் பார்க்க முடியவில்லை என்ற செய்திகள் தான் வருகிறது.
சிலர் எனது அத்தையை எங்களது சொந்த பந்தத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டனர். எனது அத்தை என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு வாரம் கடந்தும் அவருக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை. இது மிகவும் மோசமான சூழ்நிலை என அவர் குற்றம் சாட்டினார்.