சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், நடிகர் கஞ்சா கருப்பும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருச்செங்கோடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முத்துமணிக்கு ஆதரவாக இவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் கஞ்சா கருப்பு செய்தியாளர்களிடம் போசும் போது “ வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய பல்வேறு கட்சிகளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். முத்துமணி கட்சி ஆரம்பித்தால் நானும், நடிகை ஷகிலாவும் அவரது கட்சியில் இணைந்து பணியாற்றுவோம்.