இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய சிறுமியிடம், வீட்டின் உரிமையாளரான எரோன் மோசஸ் (58) என்பவர் சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். மகள் அழுவதைக் கண்டு, தனது பெற்றோர்கள் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, அவர், நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து எரோன் மோசசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.