திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை - உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

திங்கள், 4 அக்டோபர் 2021 (17:26 IST)
தமிழகத்தில் திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும், திரையரங்குகளில் குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பது தொடர்பான புகார் குறித்து அடிக்கடி சோதனை செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்