தமிழகத்தை வெளுத்து வாங்கப்போகும் கனமழை..

Arun Prasath

செவ்வாய், 22 அக்டோபர் 2019 (09:23 IST)
அரபிக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்பதால் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட  பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தென் மேற்கு-மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்