இன்னும் சில மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை.!!

சனி, 4 நவம்பர் 2023 (12:25 IST)
இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கிவிட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாலையில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்