தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வியாழன், 22 அக்டோபர் 2020 (07:49 IST)
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிடின் காரணமாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 
 
இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், தர்மபுரி, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்