இன்னும் சிலமணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

வெள்ளி, 15 டிசம்பர் 2023 (14:23 IST)
இன்னும் சில மணி நேரத்தில் 5 தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது
 
இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய  5 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து மேற்கண்ட ஐந்து மாவட்டத்தில் உள்ள நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அரபிக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளா மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்