கனமழை அலெர்ட்; இன்று எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

சனி, 4 பிப்ரவரி 2023 (09:19 IST)
இன்று தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வங்க கடலில் உருவான புயல் சின்னம் இலங்கையில் கரையை கடந்த நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த நாட்களில் தென் மாவட்டங்கள், டெல்டா பாசன பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்