மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காமக் கொடூரன்

புதன், 23 செப்டம்பர் 2015 (10:31 IST)
நாமக்கல் பகுதியில், மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
நாமக்கல் அருகேயுள்ள தூசூர் பாலப்பட்டியில் கொலுசுக்கு பாலீஷ் போட்டுத் தரதப்படும் என்று கூறியபடி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் வந்துள்ளனர்.
 
அப்போது, அவர்களுள் ஒருவர், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்றுள்ளார், அப்போது, அங்கிருந்த 20 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக் கூறப்படுகிறது.
 
இதனால், அதிர்ச்சியடைந்த அப் பெண் கூச்சல் போட்டுள்ளார். இந்த அலரல் சத்தத்தைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர்.
 
பின்னர், அவர்கள் அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் பீகார் மாநிலம், சுப்போவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து, அவரையும், அவருடன் வந்த மற்றொரு நபரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்