பேத்தியின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட பாட்டி

வெள்ளி, 18 மே 2018 (15:54 IST)
வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் பாட்டி தனது உயிரைக் கொடுத்து தனது பேத்தியை காப்பாற்றியுள்ளார்.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி லட்சுமி. லட்சுமி தனது வீட்டின் பால்கனியில் அமர்ந்து கொண்டு பூ கட்டிக்கொண்டிருந்தார். நடராஜனும் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பால்கனி இடிந்து விழுந்தது.  தனது பேத்தியின் உயிரைக் காப்பாற்ற லட்சுமி, குழந்தையை இறுக்கிப் பிடித்து குனிந்துகொண்டார்.
இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கிய லட்சுமியையும், நடராஜனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்