அதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அதன் பின்னர் அந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் சந்தேகத்துக்குறிய வகையில் மரணமடைந்தார். அதனையடுத்து அவரது நண்பர் சயனும் விபத்தில் சிக்க அவரது மனைவியும் குழந்தையும் இறக்க அவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
தற்போது அமைச்சர் விஜயப்பாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியனும் மர்மமான முறையில் இறந்துள்ளது தமிழக அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் அறிக்கையை வைத்து மத்திய அரசு குடியரசுத்தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் தமிழகத்தில் ஆர்டிக்கிள் 365-ஐ பயன்படுத்தி ஆட்சியை ஆகஸ்டில் கலைக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.