தமிழக சட்டசபையில் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி மௌனமாக இருக்கலாமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ஆளுநர் மௌனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு அனுப்பிய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படி தெரியும் என்றும் நீதிபதிகள் கேள்விகளை முன்வைத்தனர்.