சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை! – மக்கள் நிம்மதி பெருமூச்சு!

வெள்ளி, 1 அக்டோபர் 2021 (10:41 IST)
அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில் சமீப மாதங்களில் கேஸ் சிலிண்டர் விலையும் வேகமாக ஏறி வந்தது. கடந்த சில மாதங்களில் மாதத்திற்கு இரண்டு, மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

சிலிண்டர் விலை ஆயிரத்தை தொடும் நிலையில் உள்ள நிலையில் அக்டோபர் மாதத்திற்கான சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூ.902க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாலும் மாத இறுதிக்குள் எப்போது வேண்டுமானாலும் விலை உயர்த்தப்படலாம் என்ற பதட்டமும் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்