மாஸ் என்ட்ரி கொடுப்பேன்: உயிரிழந்த பிரியாவின் கடைசி சமூக வலைத்தள பதிவு!

செவ்வாய், 15 நவம்பர் 2022 (11:31 IST)
மாஸ் என்ட்ரி கொடுப்பேன்: உயிரிழந்த பிரியாவின் கடைசி சமூக வலைத்தள பதிவு!
எதற்கும் கவலைப்பட வேண்டாம், மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுப்பேன் என உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த கடைசி ஸ்டேட்டஸ் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 
 
17 வயது கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் அந்த அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து இரண்டு மருத்துவர்கள் பணி இடைநீக்கம் செய்துள்ளதாகவும் பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் பிரியாவின் கடைசி சமூக வலைதள ஸ்டேட்டஸ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதில் யாரும் எதற்கும் பீல் பண்ண வேண்டாம், மாஸ் என்ட்ரி கொடுப்பேன். நான் சீக்கிரமாக ரெடி ஆயிட்டு மீண்டும் கால்பந்து விளையாடுவேன். என்னோட கேம் என்னை விட்டு போகாது. நான் மீண்டும் திரும்பி வருவேன் என்று நம்பிக்கையாய் இருங்க’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் உயிரிழந்த வீராங்கனையின் தந்தை தனது மகள் குறித்து கூறிய போது ஜவ்வு கிழிந்து உள்ளது என டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் பிரியா உயிரிழப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பிரியாவின் இழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்