பட்டினப்பாக்கம் கடற்கரையில் வெள்ளைநுரை : மாசின் எச்சரிக்கையா, இயற்கையின் சீற்றமா?

Siva

வியாழன், 23 அக்டோபர் 2025 (09:00 IST)
சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் சமீப நாட்களாக கடல் அலைகளில் வழக்கத்திற்கு மாறாக வெண்மையான நுரை அதிகமாக காணப்படுகிறது. இந்த வெண்மையான நுரைக் கூட்டம், கடலின் மேற்பரப்பில் ஒரு தடித்த போர்வையை போல படர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்தப் பகுதியில் இவ்வாறு நுரை வெளியேறுவது வழக்கமான நிகழ்வாக இருந்தாலும், இந்த முறை அதன் அடர்த்தி அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
 
இந்த வெண்மையான நுரை உருவாவதற்கு பின்னால், மனித செயல்பாடுகளால் ஏற்படும் மாசு ஒரு பிரதான காரணமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
பட்டினப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவுநீர்கள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் அடையாறு ஆற்றின் வழியாக கடலில் நேரடியாகக் கலக்கின்றன.
 
இந்தக் கழிவுகளில் உள்ள சர்பாக்டன்ட்கள் மற்றும் பாஸ்பேட்டுகள் போன்ற இரசாயன பொருட்கள், கடல் அலைகளின் வேகத்தில் நுரையாக மாறிப் பெரிய அளவில் வெளியேறுகின்றன என்று அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும் கூறுகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்