சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் சமீப நாட்களாக கடல் அலைகளில் வழக்கத்திற்கு மாறாக வெண்மையான நுரை அதிகமாக காணப்படுகிறது. இந்த வெண்மையான நுரைக் கூட்டம், கடலின் மேற்பரப்பில் ஒரு தடித்த போர்வையை போல படர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கழிவுகளில் உள்ள சர்பாக்டன்ட்கள் மற்றும் பாஸ்பேட்டுகள் போன்ற இரசாயன பொருட்கள், கடல் அலைகளின் வேகத்தில் நுரையாக மாறிப் பெரிய அளவில் வெளியேறுகின்றன என்று அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும் கூறுகின்றனர்.