தற்போது பெய்துவரும் கனமழையை அடுத்து பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாகம் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 18,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரித்ததை அடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொசஸ்தலை ஆற்றுப் பாலம் உடைந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.