அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை: தமிழகத்திற்கு வானிலை எச்சரிக்கை

ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (14:59 IST)
அடுத்தடுத்து ஐந்து நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்று வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
அதேபோல் சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்