சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டடத்தின் தீ விபத்து! விரைந்த தீயணைப்பு படைகள்..!

திங்கள், 3 ஏப்ரல் 2023 (07:25 IST)
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு படைகள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையின் அடையாளங்களில் ஒன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடம் என்பதும் 14 மாடி கட்டிடமான இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீரென நேற்று தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள. 
 
இதனை அடுத்த தீயை அழைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் ஒரு சில மணி நேரங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிவிடலாம். 
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு பணியினர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விசாரணை செய்து வரும் வருகின்றனர் என்பதும் இது குறித்து அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்