குடும்ப அட்டை தாரர்களின் ஆதார் விவரங்களை ஊழியர்கள் கேட்கக் கூடாது- ஆணையர் சுற்றறிக்கை

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (21:16 IST)
கடந்தாண்டு  நடைபெற்ற சட்டசபைத்தேர்தலில், ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பு ஏற்றது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு மக்கள்  நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், குடும்ப அட்டை தாரர்களின் ஆதார் விவரங்களை ஊழியர்கள் கேட்கக் கூடாது என அனைத்துக் கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு துறையின் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ALSO READ: ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம்: தமிழக அரசு
 
வங்கிக் கணக்கு இல்லாத குடும்ப அட்டைதார்கள் புதிய வங்கிக் கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை அருகில் உள்ள ரேசன் கடையில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்