கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது ஈபிஎஸ் திடீர் மயக்கம்: அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி

புதன், 27 ஜூலை 2022 (13:11 IST)
தமிழக அரசு மின் கட்டண உயர்வு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட நிலையில் தமிழகத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது
 
அந்த வகையில் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது
 
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிய வைத்தனர். இதனை அடுத்து அவர் ஓய்வு எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
இருப்பினும் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டதால் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்