மக்களை தேடி மருத்துவம்: விரைவில் புதிய திட்டம் அமல் என அறிவிப்பு

புதன், 7 ஜூலை 2021 (20:53 IST)
மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார் 
 
தமிழகத்தில் புதிய ஆட்சியை அவர்களிலிருந்தே பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் மக்கள் மத்தியில் அந்த திட்டங்கள் பாராட்டுகளை பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக சுகாதாரத்துறையில் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மிக மிக குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் விரைவில் முதல்வர் அமல்படுத்துவார் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது
 
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்; முதற்கட்டமாக  20 லட்சம் நீரழிவு, ரத்த அழுத்தம் உடைய பொது மக்களுக்கு வீடு தேடிச் சென்று மாத்திரைகள் கொடுக்கப்படும் என சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்